உள்ளூர் செய்திகள் (District)
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை தொழிலாளி பலி
- மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு கம்பியை எதிர்பாராதவிதமாக சத்யன் தொட்டுவிட்டார்.
- இதில் தூக்கி வீசப்பட்டு நேற்று சத்யன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கனகமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் சத்யன் (வயது 23). இவர் தளி அருகேயுள்ள சரகப்பள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி லாரியில் கோழிகளை ஏற்றும் பணியில் சக தொழிலாளர்களுடன் சத்யனும் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு கம்பியை எதிர்பாராதவிதமாக சத்யன் தொட்டுவிட்டார்.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சத்யனை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தளி போலீசார் சத்யனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.