மத்தூர் அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் மர்மச்சாவு
- கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இதனை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கூச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 49). இவர் கண்டன்னஅள்ளி பகுதியில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்ரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு பாரை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.