உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே வாலிபரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பி கைது

Published On 2022-08-09 10:21 GMT   |   Update On 2022-08-09 10:21 GMT
  • ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செவ்வந்தி (வயது 30). கடந்த சிலவருடங்களுக்கு முன்பு கல்லாவியை சேர்ந்த அன்பரசன் என்பவருடன் செவ்வந்திக்கு திருமணம் நடந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் செவ்வந்தி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் அன்பரசனும் அவரது தம்பி கலையரசனும் செவ்வந்தியின் தாய் வீட்டுக்கு வந்து செவ்வந்தியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டன் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் மணிகண்டன் தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News