அகழ்வாய்வில் கற்கால கருவி கண்டுபிடிப்பு
- நிலத்தை உழும் கலப்பையின் கொழு வாகவோ, வெட்டுவதற்கான கோடாரியாகவோ பயன்ப டுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழகத்தில் 3 ஆயிரம் முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி பூதிநத்தம் அகழாய்வில் கிடைத்துள்ளது.
பென்னாகரம்,
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதிநத்தம் கிராமத்தில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நடத்தப்பட்ட அகழ்வாய்வில் 36 செ.மீ ஆழத்தில் 22 சென்டிமீட்டர் நீளமுள்ள கற்கால கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
போலாராய்டு என்ற கல் வகையை சார்ந்த இந்த கருவியின் ஒரு பகுதி 7.74 சென்டிமீட்டர் அகலம் 4.7 சென்டிமீட்டர் தடிமனுடன் மற்றொரு பகுதி 1.7 சென்டி மீட்டர் அகலம் 3.2 சென்டிமீட்டர் தடிமனுடனும் உள்ளது.
இது நிலத்தை உழும் கலப்பையின் கொழு வாகவோ, வெட்டுவதற்கான கோடாரியாகவோ பயன்ப டுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 3 ஆயிரம் முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி பூதிநத்தம் அகழாய்வில் கிடைத்துள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.