உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அருகே போடப்பட்டு 6 மாதங்களிலேயே பெயர்ந்து போன கான்கிரீட் சாலையை படத்தில் காணலாம்.

கடத்தூர் அருகே புதிதாக போடப்பட்டு 6 மாதத்தில் பெயர்ந்து போன கான்கிரீட் சாலை -பொதுமக்கள் புகார்

Published On 2022-07-23 09:41 GMT   |   Update On 2022-07-23 09:41 GMT
  • ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
  • முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்க ரஅள்ளிகிராம பஞ்சாயத்தில் பழைய காலணி பகுதியில் ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு அமைக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் அந்த ரோடு பொதுமக்கள் நடந்து போக முடியாத நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பாழடைந்து உள்ளது.

எனவே மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் இந்த ரோட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News