உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் மோதி வடமாநில தொழிலாளி பலி

Published On 2023-06-08 09:48 GMT   |   Update On 2023-06-08 09:48 GMT
  • அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
  • சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

உத்தரபிரதேசம் மாநிலம் பிஜோரி பகுதியைச் சேர்ந்த சூரன் (வயது45). மேஸ்திரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சப்பக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில சூரனும், மற்றொரு வடமாநில தொழிலாளியான தர்காஷ்வரன் ஷகானி என்பவரும் சப்பக்கல் அருகே உளிவிரனப்பள்ளி அருகே நடந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்காஷ்வரன் ஷகானியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News