உள்ளூர் செய்திகள் (District)

புகையிைல பதுக்கிய வடமாநில வாலிபர் கைது

Published On 2022-07-21 09:25 GMT   |   Update On 2022-07-21 09:25 GMT
  • 3 மூட்டை புகையிலை, போதை பாக்கு மளிகை கடைகளுக்கு விநியோகம்
  • நிம்பா சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் கே.ஏ.எஸ்.நகரில் ஒரு வீட்டில் புகையிலை, போதை பாக்கு பதுக்கி வைத்திருப்பதாக மல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு 3 மூட்டை புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை மளிகை கடைகளுக்கு விநியோகம் செய்ய மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்து போலீசார், விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிம்பாசிங் (வயது 26) என்பவர் புகையிலை ெபாருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நிம்பா சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News