உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரி பேக்கரியில் அதிகாரிகள் சோதனை

Published On 2023-11-01 08:50 GMT   |   Update On 2023-11-01 08:50 GMT
  • பூஞ்சை படிந்த கேக் விற்றதாக குற்றச்சாட்டு
  • 6 வகை திண்பண்டங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு பேக்கரியில் கெட்டுப்போன பூஞ்சை படிந்த கேக் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

எனவே கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 6 வகை திண்பண்டங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News