உள்ளூர் செய்திகள் (District)

கள்ளசாராயம் விற்ற மூதாட்டி கைது

Published On 2023-05-07 09:45 GMT   |   Update On 2023-05-07 09:45 GMT
  • அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.
  • அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள வாலிப்பட்டி கிராம த்தைச் சேர்ந்தவர் தங்கப்பொ ண்ணு (வயது 60). இவர் அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர். பின்னர் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News