உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தாலுகா போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அப்போது விசாரணை செய்ததில் பவானி அருகே உள்ள சொக்காரம்மன் நகரை சேர்ந்த வின்சன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி சென்ற குட்கா பொருள் மற்றும் காரின் மதிப்பு ரூ.3,68,104 ஆகும்.