உள்ளூர் செய்திகள்
- டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- லாரி முதியவரின் மேல் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெருங்காடு கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜ்(வயது.70). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை மாரண்டஅள்ளி - அமானிமல்லாபுரம் சாலையில் கணபதி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்,
அப்போது மாரண்டஅள்ளியிலிருந்து மல்லாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி சரக்கு லாரி முதியவரின் பின் பக்கம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.