உள்ளூர் செய்திகள் (District)

ஐ.ஏ.எஸ் எனக்கூறி ரூ.2.83 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2023-02-25 09:12 GMT   |   Update On 2023-02-25 09:12 GMT
  • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
  • இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதி சேர்ந்த பொன்னுசாமி இவரது மகன் அரவிந்த் குமார் வயது 30 பொன்னுசாமி மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சேலம் பஜாருக்கு வரும்போது சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற அரிசி தரகர் அறிமுகம் ஆனார்.நடராஜன் தனக்கு ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் என்பவரை தெரியும் அவர் மூலம் உனது மகனுக்கு அரசு வேலை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை தொடர்ந்து அரவிந்த் குமார் இடம் சசிகுமார் அறிமுகப்ப டுத்தப்பட்டார். உடனடியாக அரசு வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் அளித்ததன் பேரில் அரவிந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் ரூபாய் 2 கோடியே 83 லட்சத்தை வசூலித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பேசியபடி யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகம் இருந்த அரவிந்த் குமார், சசிகுமார் பற்றி விசாரித்த போது அவர் ஒரு போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட தரகர் நடராஜன், சாந்தலட்சுமி, புவனேஸ்வரி, மணி, கோபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் புவனேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று இரவு மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நடராஜனை கைது செய்து இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணி, கோபி மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News