உள்ளூர் செய்திகள்

சிறுவர்- சிறுமிகளுக்கான மன்றத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்து வைத்தார்.

சிறுவர்- சிறுமிகளுக்கான மன்றம் திறப்பு

Published On 2023-03-10 09:33 GMT   |   Update On 2023-03-10 09:33 GMT
  • மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

சீர்காழி:

சீர்காழி காவல்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்துவைத்தார்.

மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி காவல்த்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.

சீர்காழி டிஎஸ்பி.லாமெக் தலைமை வகித்தார்.

காவல்ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கினார்.

மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மன்றத்தில் பொது நூலகம், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News