உள்ளூர் செய்திகள்

சின்ன மருதூர் பகுதியில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் விலை தொடர் வீழ்ச்சி

Published On 2022-11-15 09:44 GMT   |   Update On 2022-11-15 09:44 GMT
  • பரமத்தி வேலூர் தாலு–காவில் பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
  • விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலு–காவில் சோழசிராமணி, ஜமீன்–இளம்பள்ளி, கொத்த–மங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரிய–சோளிபாளையம், குரும்ப–லமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.

இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு பகுதி–களில் உள்ள தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மஞ்சளுக்கு நல்ல விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்டு வந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். தற்போது மஞ்சள் பயிர் சுமார் 500 ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்து

வருகின்றனர்.

மஞ்சள் பயிரிட்ட 10-வது மாதத்தில் மஞ்சள் தலையை அறுத்து விடுகின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து கூலி ஆட்கள் மூலம் மஞ்சளை வெட்டி எடுக்கின்றனர். பின்னர் விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என இரண்டாக பிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News