உள்ளூர் செய்திகள் (District)

பரமத்திவேலூர் பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்திவேலூர் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-12-28 09:21 GMT   |   Update On 2022-12-28 09:21 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
  • கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேலத்தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கடந்த 23-ந் தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 25-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பொங்கல், மாவிளக்கு பூஜையும், அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று மாலை பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News