உள்ளூர் செய்திகள் (District)

ஒரத்தநாடு பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்.

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-09-22 07:47 GMT   |   Update On 2023-09-22 07:47 GMT
  • வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறாக இருந்து வருகிறது.
  • இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

திருவோணம்:

ஒரத்தநாடு நகர் மற்றும் திருவோணம் பகுதியில் சமீபகாலமாக தெரு நாய்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக வீதி உலா வருகின்றது.

பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூராக இருந்து வருகிறது.

மேலும் சாலைகளில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோவரை விரட்டி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும் பெரும்பாலான தெருநாய்கள் நோய் வாய்ப்பட்டு சொறியுடன் காணப்படுகிறது.

நாய்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் போது ஆக்ரோஷமாக தாக்கும் சம்பவம் பொதுமக்களையும் கடித்து குதற பாய்வதாகவும்.

இதனால் உயிர் அச்சத்துடன் அலறி அடித்து ஓட வேண்டிய நிலையும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்க ளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News