உள்ளூர் செய்திகள் (District)

பாலத்தின் சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து சாவு

Published On 2022-10-08 09:24 GMT   |   Update On 2022-10-08 09:24 GMT
  • பாலத்தின் சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து இறந்தார்
  • பலத்த காயம் ஏற்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் மீது படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்நிலையில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News