உள்ளூர் செய்திகள் (District)

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

Published On 2022-09-26 07:27 GMT   |   Update On 2022-09-26 07:27 GMT
  • சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது

பெரம்பலூர்:

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை பின்புறம் உள்ள ஓட்டர் தெருவில் வசித்து வந்தவர் குமார் மகன் நீலகண்டன் (வயது 26). இவர் மீது கொலை உள்ளிட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இவர் பெயர் உள்ளது.

இந்நிலையில் நீலகண்டன் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் - துறையூர் சாலையில் அம்மாபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அபபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபதத்து நேரிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து நீலகண்டன் உயிரிழந்தார்.

தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

Similar News