உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2022-10-10 10:04 GMT   |   Update On 2022-10-10 10:04 GMT
  • அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புது அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் அதே பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். ராமமூர்த்தி கடந்த 7-ந் தேதி இரவு அருகே உள்ள அடைக்கம்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.களத்தூர் பிரிவு ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமமூர்த்தி படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமமூர்த்தி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News