உள்ளூர் செய்திகள் (District)

படுக்கையில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

Published On 2023-03-05 06:52 GMT   |   Update On 2023-03-05 06:52 GMT
  • அரசு மருத்துவமனையில் பரிதாபம்
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பெரம்பலூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மேலக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அஞ்சலை (வயது 60). கலியன் ஏற்கனவே இறந்து விட்டதால், அஞ்சலை தனியாக வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி அஞ்சலைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை அவருடைய மகள் தவமணி வேப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அஞ்சலை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மருத்துவமனையில் படுக்கையில் இருந்து அஞ்சலை தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சலை நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News