உள்ளூர் செய்திகள் (District)
- மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது
- வேப்பமரத்தில் கட்டியிருந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன்பாபு(வயது 44). விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர் நேற்று கொட்டகையில் இருந்த பசுமாட்டை வெளியில் உள்ள வேப்பமரத்தில் கட்டிவிட்டு, வயல் வேலைக்கு சென்றார். அப்போது மதிய நேரத்தில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு செத்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, கால்நடை மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.