உள்ளூர் செய்திகள் (District)

மாவட்ட கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது-முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

Published On 2022-10-27 09:11 GMT   |   Update On 2022-10-27 09:11 GMT
  • பெரம்பலூர் கடைவீதியில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்ற–ப்படுவதாக கூறப்படுகிறது.
  • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிப்பதாவது:

பெரம்பலூர் கடைவீதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து கடைவீதியிலேயே இயங்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றும் முடிவினை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News