உள்ளூர் செய்திகள் (District)
விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
- விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 72). இவர் கடந்த மாதம் 24-ந்தேதி பெரம்பலூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் அவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த வேலாயுதத்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."