உள்ளூர் செய்திகள்
இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு
- இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது
பெரம்பaலூர்:
பெரம்பலூரில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்து இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் வீரசெங்கோலன், ஜெயவர்த்தனன், வக்கீல் அண்ணாதுரை, பிரேம்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர் தங்கசண்முகசுந்தரம், லெனின், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.