உள்ளூர் செய்திகள்

மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி

Published On 2022-12-22 09:41 GMT   |   Update On 2022-12-22 09:41 GMT
  • மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி போடப்பட்டது.
  • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை நோய் தடுப்பூசி இலவசமாக மாடுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களது மாடுகளுக்கு மாட்டம்மை நோய் தடுப்பு இலவச தடுப்பூசியை செலுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News