உள்ளூர் செய்திகள்

126 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு

Published On 2022-09-01 09:02 GMT   |   Update On 2022-09-01 09:02 GMT
  • 126 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 126 இடங்களில் விநாயகர் உருவசிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்திசிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில் மகாலிங்க சித்தர்சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும், மகாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா என மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Tags:    

Similar News