உள்ளூர் செய்திகள் (District)

இந்திய அரசியலமைப்பு தின விழா

Published On 2022-11-27 10:32 GMT   |   Update On 2022-11-27 10:32 GMT
  • இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது
  • வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) துரைமுருகன், சைபர் கிரைம் (தொழில்நுட்பம்) எஸ்ஐ சிவமீனா. வக்கீல் நிதிகள் அறக்கட்டளை இயக்குநர் ராமச்சந்திரன், மாவட்ட வள அலுவலர் நல்லுசாமி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபதி, இயற்கை மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். பின்னர் அரசியல் அமைப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News