உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டம் தபால் கீரனூரில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
- பெரம்பலூர் மாவட்டம் தபால் கீரனூரில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்த தபால் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள மூப்பனார் மற்றும் மகா மாரியம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதற்காக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. தபால் கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தபால் கீரனூர் பொதுமக்கள் இளைஞர்கள், துபாய் வாழ் பக்தர்கள் செய்திருந்தனர்.