உள்ளூர் செய்திகள் (District)
- தேசிய மருந்தியல் வார விழா நடந்தது
- போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட பார்மசி அன்ட் ஸ்டாகிஸ்ட் அசோசியேஷன் சார்பில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மருந்து கட்டுப்பாட்டு துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் அதியமான், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் பேசுகையில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் புதிய சட்டம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தையும் விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும், மீறினால் கடுமையான தண்டனைக்குள்ளாவீர்கள் என தெரிவித்தனர். இதில் மருந்து வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.