உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு

Published On 2023-10-30 06:55 GMT   |   Update On 2023-10-30 06:55 GMT
  • பெரம்பலூரில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் சாலை ஓரங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை அறிவிப்பு கிடைக்கப்பட்ட 3 தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News