- 17 வழக்குகள் சமரச தீர்வு
- பெரம்பலூரில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமமான பல்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
இதில் மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் கோர்ட் நீதிபதி சங்கீதா ஆகியோர் கொண்ட அமர்வு அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். இதில் ரூ.35 லட்சத்து 56 ஆயிரத் மதிப்பிலான 17 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதையடுத்து மோட்டர் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு சமரச தீர்வுக்கான சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்கள், போலீசார், கோர்ட் பணியாளர்கள் மற்றும் வழக்கு தாரர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.