உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி

Published On 2023-02-23 08:43 GMT   |   Update On 2023-02-23 08:43 GMT
  • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது
  • பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து போட்டியும் நடைபெற்றது. இதில் நீச்சல் போட்டிகள் 200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான பிரிவுகளில் நடைபெற்றது. நீச்சல் போட்டிகளில் 50 மாணவர்களும், 21 மாணவிகளும், கால்பந்து போட்டியில் 13 அணிகளை சேர்ந்த 216 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) பொது பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு தடகளம், கபடி, இறகுபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாகவும், ஆண்களுக்கு வாலிபால், சிலம்பம் போட்டிகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News