உள்ளூர் செய்திகள் (District)
போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
- போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தtu; பாஸ்கர் மகன் பார்த்திபன் (27). இவர் 17 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் பார்த்திபன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.