உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-07-20 09:08 GMT   |   Update On 2022-07-20 09:08 GMT
  • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
  • பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது

பெரம்பலூா் :

பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும், பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (21-ந் தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவத்துள்ளார்.

Tags:    

Similar News