உள்ளூர் செய்திகள் (District)

கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2023-08-18 06:48 GMT   |   Update On 2023-08-18 06:48 GMT
  • கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் பஸ் நிலையம் அருகே கலையரங்கம் உள்ளது. இதன் அருகே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று அந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடிக் கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்தப்பகுதியில் உள்ள அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்றி கொள்வதாக கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். மேலும் அந்த இடத்தில் யாரும் கொடிக்கம்பம் நடுவதில்லை என முடிவு செய்து ஏற்கனவே நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகளே அகற்றிக்கொண்டனர்.

Tags:    

Similar News