உள்ளூர் செய்திகள் (District)

சாலை பாதுகாப்பு வார விழா

Published On 2023-01-13 06:43 GMT   |   Update On 2023-01-13 06:43 GMT
  • சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
  • 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் 52-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விழா 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.


Tags:    

Similar News