உள்ளூர் செய்திகள்

குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

Published On 2023-08-02 08:03 GMT   |   Update On 2023-08-02 08:03 GMT
  • கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
  • 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளான மேசைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .மேசைப்பந்து பிரிவு போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பந்து போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கிழுமத்தூர் மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அறிவேல் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News