உள்ளூர் செய்திகள் (District)

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு

Published On 2022-11-16 09:23 GMT   |   Update On 2022-11-16 09:23 GMT
  • கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
  • மகன் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார்

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எசனை தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா(வயது 70). இவரது மனைவி சின்னம்மாள் இறந்துவிட்டதால், தனது மகன் செல்வகுமாரின் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார். இந்த நிலையில் சுப்பையா சம்பவத்தன்று இரவு வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காட்டுமாரியம்மன் கோவில் அருகே உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் உள்ள கிணற்று மேட்டில் சுப்பையாவின் காலணிகள் இருந்ததை, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வகுமாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனே பெரம்பலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுப்பையா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

Tags:    

Similar News