உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உட்பட இருவர் பலி

Published On 2023-05-26 05:31 GMT   |   Update On 2023-05-26 05:31 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உட்பட இருவர் பலியானர்
  • இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகரம்சீகூர்,

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு இ.பி ஆபிஸ் எதிரே இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்நிலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News