உள்ளூர் செய்திகள்

நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்த வலியுறுத்தல்

Published On 2022-12-14 09:36 GMT   |   Update On 2022-12-14 09:36 GMT
  • நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது
  • விவசாயத் தொழிலாளர் சங்க ேகாரிக்கை மாநாடு

பெரம்பலூர்:

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி, மாவட்ட பொருளாளர் காமராஜ்,மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, முழுமையான கூலியை வழங்க வேண்டும். நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News