மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்
- வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது67). இவரது மனைவி முறுகாயி (59). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூரில் இருந்து மருவத்தூர் சென்றனர்.
மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டி செல்ல பின்னால் அவரது மனைவி முருகாயி உட்கார்ந்திருந்தார்.
இந்த நிலையில் பேரலி மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது முருகாயி மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென மயங்கி கீழே விழுந்தார். கணவர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே டாக்டர்கள் முருகாயிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.