உள்ளூர் செய்திகள் (District)
- பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் அங்கையர் செல்வி (வயது 35). இவர் வயலில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அங்கையர் செல்வி யை பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அங்கையர் செல்வி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.