உள்ளூர் செய்திகள் (District)

சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

Published On 2023-02-08 09:45 GMT   |   Update On 2023-02-08 09:45 GMT
  • சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலியானார்.
  • அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது.

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பொன்னகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் மொரிசியஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது34). இவர்களுக்கு மோனிஷா (11) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் ஜெயகொடிக்கு சொந்தமான வயலில் சோளம் அறுவடை செய்வதற்காக இயந்திரத்தின் உரிமையாளரும் அதன் ஓட்டுனர் நூத்தாப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடையன் மகன் கோவிந்தராஜ் (40) என்பவர் வண்டியை இயக்கினார்.

இந்நிலையில் ஜெயக்கொடி வாகனத்தின் பின்னால் விழும் சோள கருத்துக்களை பொறுக்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது. பின்னர் அவரை மீட்டு முருகன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News