உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா கைது

Published On 2023-04-29 09:08 GMT   |   Update On 2023-04-29 09:08 GMT
  • சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • போக்சோ சட்டத்தில் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார்.

52 வயதான பெரியப்பாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் பெரியப்பா திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். சிறுமி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் அவர் தனது தம்பி மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் சிறுமியிடம், நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவரது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெரியப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News