உள்ளூர் செய்திகள் (District)

விழாவில் ஒரு மாணவனுக்கு டி.எஸ்.பி.மகாலட்சுமி பரிசு வழங்கிய காட்சி

திருச்செங்கோட்டில் போலீசார் நடத்திய பொங்கல் விழா

Published On 2023-01-13 07:25 GMT   |   Update On 2023-01-13 07:25 GMT
  • திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பாய்ஸ் கிளப் சார்பில் பொங்கல் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாய்ஸ் கிளப் அலுவலகம் அருகே நடந்தது.
  • திய மண்பானை வைத்து பொங்கல் சமைத்து படையல் இட்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்ட காவல்துறை திருச்செங்கோடு உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பாய்ஸ் கிளப் சார்பில் பொங்கல் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாய்ஸ் கிளப் அலுவலகம் அருகே நடந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதிய மண்பானை வைத்து பொங்கல் சமைத்து படையல் இட்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தன.

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற சர்வின், 2-ம் பரிசு பெற்ற கவுசிக்ராஜ், 3-ம் பரிசு பெற்ற ஹேமா தர்ஷன், ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அருள்குமரன், 2-ம் பரிசு பெற்ற அஸ்வின், 3-ம் பரிசு பெற்ற மணிகண்ட ராவ் ஆகியோருக்கு டி.எஸ்.பி. மகாலட்சுமி பரிசுகள் வழங்கினார்.

இதேபோல் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் விழாவை ஒட்டி சிறப்பு பரிசாக புடவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலைய கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சிவா மற்றும் நிர்வாகிகள் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News