உள்ளூர் செய்திகள் (District)

பொன்னேரியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2023-02-23 13:36 GMT   |   Update On 2023-02-23 13:36 GMT
  • பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
  • முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

பொன்னேரி:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி தொகுதி அதிமுக மாவட்ட செயலாளர் பலராமன், நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆலோசனைபடி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் நாகராஜ், சம்பத்மதி, மெதுர் ரமேஷ், வாசுகி, திருக்குமரன், ரவி, வெங்கடேச ரங்கராவ், சங்கர், சீனு, ஆனந்தன் மணிமாறன், சுதாகர், பிரகாஷ் மற்றும், பேரூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News