உள்ளூர் செய்திகள் (District)
திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை
- பராமரிப்பு பணி காரணமாக மாதந்தோறும் ஒரு நாள் மின்தடை அமலில் உள்ளது
- திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் புறநகர் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை
திண்டுக்கல், ஜூன்.12-
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை பொன்னகரம், நல்லாம்பட்டி, வாழைக்காய்பட்டி, ரெட்டியபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ.காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி.காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி,
நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.