உள்ளூர் செய்திகள்

நாளை வியாசர்பாடி பகுதிகளில் மின்தடை

Published On 2023-03-08 07:11 GMT   |   Update On 2023-03-08 07:11 GMT
  • சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
  • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வியாசர்பாடி பகுதிகளான மஞ்சம்பாக்கம் பகுதி கம்மன் நகர், மந்தைவெளி 1 முதல் 6-வது தெரு, பெருமாள் கோவில் தோட்டம், ஏ.வி.எம்.நகர், தெலுங்கு காலனி, திருமுருகன் நகர், வி.ஜி.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News