உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-07-18 08:17 GMT   |   Update On 2023-07-18 08:17 GMT
  • பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

பென்னாகரம்,

தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:--

பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப் பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News