உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-04-30 09:37 GMT   |   Update On 2023-04-30 09:37 GMT
  • தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
  • நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சை நகர மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை (திங்கட்கிமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத்தெரு.

நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரேஸ்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News